மைக்ரோசாப்ட் விண்டோஸில் புதிய சிக்கல் – செக்யூரிட்டி அப்டேட் விளக்கம்! - Daily Dhuniya

Breaking

Thursday, July 8, 2021

மைக்ரோசாப்ட் விண்டோஸில் புதிய சிக்கல் – செக்யூரிட்டி அப்டேட் விளக்கம்!

கொரோனா பேரிடர் காலத்தில் வீடுகளில் இருந்து அலுவலக பணிகளை செய்து வரும் நபர்கள் மேற்கொள்ளும் விண்டோஸ் செக்யூரிட்டி சிக்கல்களை தீர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

செக்யூரிட்டி அப்டேட்

பொதுவாக அலுவலகங்களை பொருத்தளவு குறிப்பிட்ட 8 அல்லது 9 மணி நேரம் வரையுமே ஊழியர்கள் வேலை பார்ப்பது வழக்கம். இந்த நேரங்களில் 2 இடைவெளியுடன், மதிய உணவுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை அலுவலக பணியாளர்கள் செலவிடுகிறார்கள். பிறகு 9 முதல் 10 மணி நேரம் வரை அவர்களின் சொந்த காரியங்களுக்கான நேரமாக ஒதுக்கப்படுகிறது. இந்த வழக்கமானது தற்போது முற்றிலும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பேரிடர் காலத்தில் அலுவலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணி புரியும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பலரும் தங்களது பொழுதுகளை மடிக்கணினியில் கழிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் ஒரு அலுவலக பணியாளர்கள் காலை எழுவது துவங்கி இரவு உறங்கும் வரை மடிக்கணினிகள் மூழ்கி கிடக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு சிஸ்டம் அல்லது லேப்டாப்பில் எந்தவொரு சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவற்றை சரி செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அலுவலகங்களில் வேலை பார்க்கும் போது கணினிகளில் ஏற்படும் சிக்கல்களையும் சரி செய்ய ஒரு குழு இருக்கும்.

ஆனால் வீடுகளில் இவ்வகையான உதவிகள் கிடைக்காது. இப்படிப்பட்ட சிக்கல்களை தான் பலர் சந்தித்து வருகின்றனர். அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் பயனர்கள் தங்களது கணினிகளை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் அவசர செக்யூரிட்டி அப்டேட் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது பிரிண்ட்நைட்மேர் எனும் செக்யூரிட்டி சிக்கல்களை சரிசெய்கிறது. அதாவது ஒரு கணினியில் தொடர்ந்து வேலை பார்க்கும் போது, பிரிண்ட்நைட்மேர் எனும் செக்யூரிட்டி சிக்கல்கள் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது இவ்வகை செக்யூரிட்டியானது கணினிகளில் Remote code execution உடன் சில ப்ரோகிராம்கள் மற்றும் புதிய கணக்குகளை உருவாக்கவும் தானாக அனுமதிக்கிறது. இவ்வகை மோசமான system level privileges பாதிப்பு ஏற்படுகையில் அவை ஹேக்கிங் செய்வதற்கு கூட உதவி புரியும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சிக்கலில் இருந்து கணினிகளை பாதுகாக்க விண்டோஸ் பயனர்கள் அனைவரும் புதிய அப்பேட்டை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதன் படி CVE-2021-34527 அல்லது CVE-2021-1675 எனப்படும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்காத விண்டோஸின் சப்போர்டட் வெர்ஷன்ஸ் ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு அப்டேட் செய்யப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment