பள்ளி திறப்பு: தேவை நிதானம், முன்னெச்சரிக்கை - Daily Dhuniya

Breaking

Friday, October 29, 2021

பள்ளி திறப்பு: தேவை நிதானம், முன்னெச்சரிக்கை

க ரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு 19 மாதங்கள் முடிந்துவிட்டன. இது மாணவர்களின் கல்வியை மட்டுமல்ல; சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் திறனையும் சேர்த்துக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால், பள்ளிகள் மாணவர்களின் கல்வியுடன் மட்டும் தொடர்புடையவை அல்ல; அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ள உதவும் சமூக அறிவையும் சேர்த்தே வழங்குபவை. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி வகுப்புகளும் கல்லூரிகளும் இரண்டு மாதங்களாகச் செயல்பட்டுவருகின்றன. கரோனா பரவல் தொடர்ச்சியாக மட்டுப்பட்டிருப்பதால், நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்தே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கரோனா முற்றிலும் முடிவுக்கு வராத சூழலில், கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
*பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்?*

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பெற்றோர்களை வலியுறுத்துங்கள். பள்ளி வளாகத்தினுள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குங்கள். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்துங்கள். மாணவர்கள், ஆசிரியர்களின் நடமாட்டம் குறைவாக இருக்குமாறு வகுப்புகளையும் வகுப்பறைகளையும் மாற்றியமையுங்கள். இருக்கையிலோ திறந்தவெளியிலோ சிறு குழுவாக மாணவர்கள் உணவு உண்ணுமாறு அறிவுறுத்துங்கள்.

No comments:

Post a Comment