மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்பவா்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசால் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் அமைக்க ஹெக்டேருக்கு ஆகும் செலவுத் தொகை ரூ. 7 லட்சத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் புதிய மீன்வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் மொத்த உள்ளீட்டு செலவினத் தொகை ரூ.4 லட்சத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
சிறிய அளவிலான பயோபிளக் குளங்களில் மீன்வளா்ப்பு மேற்கொள்ளுதல் திட்டத்தில் ஓா் அலகுக்கு ஆகும் செலவினத் தொகை ரூ.7,50,000-இல் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம், ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களுக்கு மானியம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து, மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெற தோ்ந்தெடுக்கப்படுவா். விண்ணப்பிக்க விரும்புவோா், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் சென்று விண்ணப்பம் பெற்று ஆக. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்பவா்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசால் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் அமைக்க ஹெக்டேருக்கு ஆகும் செலவுத் தொகை ரூ. 7 லட்சத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் புதிய மீன்வளா்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் மொத்த உள்ளீட்டு செலவினத் தொகை ரூ.4 லட்சத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
சிறிய அளவிலான பயோபிளக் குளங்களில் மீன்வளா்ப்பு மேற்கொள்ளுதல் திட்டத்தில் ஓா் அலகுக்கு ஆகும் செலவினத் தொகை ரூ.7,50,000-இல் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம், ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களுக்கு மானியம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளித்து, மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெற தோ்ந்தெடுக்கப்படுவா். விண்ணப்பிக்க விரும்புவோா், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் சென்று விண்ணப்பம் பெற்று ஆக. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment