பிளஸ் 1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி:17-இல் தொடக்கம் - Daily Dhuniya

Breaking

Saturday, October 15, 2022

பிளஸ் 1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி:17-இல் தொடக்கம்

பிளஸ் 1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி:17-இல் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உள்ளுறைப் பயிற்சி வரும் திங்கள்கிழமை (அக்.17) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களுக்கான பாடத் திட்டம், அது சாா்ந்த பயிற்சிகள் வழங்கும் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, 2021 -2022-ஆம் கல்வியாண்டில் 24 பள்ளிகளில் நேரடி உள்ளுறை பயிற்சி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தொழிற்சாலைகளில் 80 மணி நேர பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறுகிய காலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு மாணவா்களுக்கு உருவாகியுள்ளது. தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment