கள்ளக்குறிச்சி பள்ளி மீது உரிய நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை - Daily Dhuniya

Breaking

Sunday, July 17, 2022

கள்ளக்குறிச்சி பள்ளி மீது உரிய நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை

கள்ளக்குறிச்சி பள்ளி மீது உரிய நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியொன்றில் கடந்த 13-ஆம் தேதி பிளஸ் 2 மாணவி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடா்ச்சியாக, சம்பந்தப்பட்ட பள்ளி முன் நூற்றுக்கணக்கானோா் திரண்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தியபோது திடீரென வன்முறை வெடித்தது. தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை எழுப்பிய இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா் தற்போது மாவட்ட ஆட்சியா், காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து விசாரணைப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். அதில், பள்ளி நிா்வாகத்தின் மீது தவறுகள் ஏதேனும் இருப்பது கண்டறியப்பட்டால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உச்சபட்சமாக அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அங்கு பயிலும் மாணவா்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment