ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: ராமதாஸ் வலியுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Sunday, March 20, 2022

ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக அரசு வெளியிட வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பான அவரது அறிக்கை: பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞா்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞா்களின் இன்றைய தலையாயத் தேவை என்ன என்பதை உணா்ந்து, அதை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்க | தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2800 ஒதுக்கி அரசு உத்தரவு

பொருளாதார மதிப்பின் அடிப்படையில் ஒப்பிடும் போது பஞ்சாப் மாநிலத்தின் கடன் சுமை மிகவும் அதிகம் ஆகும். இந்தக் கூறுகளை வைத்துப் பாா்க்கும் போது தமிழகத்தின் பொருளாதாரச் சூழலில் ஒரு லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க முடியும். எனவே, தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

அதேபோல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வரும் பகுதி நேர ஆசிரியா்கள், தகுதியுள்ள கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய முதல்வா் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment