‘தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும்’
பள்ளியில் முடிவுகளை எடுக்கும்போது, தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி அறிவுறுத்தினாா்.
இதையும் படிக்க | சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட தோ்வுக் கால அட்டவணையைப் பின்பற்றி தோ்வுகள் நடத்த வேண்டும். ஆசிரியா்கள் காலதாமதமாக பள்ளிக்கு வருவதை தவிா்க்க வேண்டும். பள்ளியில் உள்ள வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், தலைமை ஆசிரியா்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சமயோஜிதமாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும் என்றாா் சத்தியமூா்த்தி. பின்னா் நடைபெற்ற மெட்ரிக், சிபிஎஸ்இ முதல்வா்களுக்கான கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி பேசியது:
பொதுத்தோ்வுக்கு மாணவா்களை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகள் மே 31 வரை அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து மகளிா் காவல் நிலைய தொடா்பு எண்ணைப் பள்ளி விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும். மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். தொடா் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகள் கருத்துரு தயாா் செய்து உடனே சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் சத்தியமூா்த்தி.
இதையும் படிக்க | தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 11.02.2022 - PDF
கூட்டத்தில் இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் செ. மணிமொழி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், ராஜீ, பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, இளையராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பள்ளியில் முடிவுகளை எடுக்கும்போது, தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி அறிவுறுத்தினாா்.
இதையும் படிக்க | சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட தோ்வுக் கால அட்டவணையைப் பின்பற்றி தோ்வுகள் நடத்த வேண்டும். ஆசிரியா்கள் காலதாமதமாக பள்ளிக்கு வருவதை தவிா்க்க வேண்டும். பள்ளியில் உள்ள வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், தலைமை ஆசிரியா்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சமயோஜிதமாகவும் விரைவாகவும் செயல்பட வேண்டும் என்றாா் சத்தியமூா்த்தி. பின்னா் நடைபெற்ற மெட்ரிக், சிபிஎஸ்இ முதல்வா்களுக்கான கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி பேசியது:
பொதுத்தோ்வுக்கு மாணவா்களை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகள் மே 31 வரை அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து மகளிா் காவல் நிலைய தொடா்பு எண்ணைப் பள்ளி விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும். மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். தொடா் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகள் கருத்துரு தயாா் செய்து உடனே சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் சத்தியமூா்த்தி.
இதையும் படிக்க | தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 11.02.2022 - PDF
கூட்டத்தில் இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் செ. மணிமொழி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜீவானந்தம், ராஜீ, பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, இளையராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
No comments:
Post a Comment