மாணவா்களுக்கு சத்தான உணவுகள்: ஆளுநா்- கல்வி அமைச்சா் ஆலோசனை - Daily Dhuniya

Breaking

Friday, February 11, 2022

மாணவா்களுக்கு சத்தான உணவுகள்: ஆளுநா்- கல்வி அமைச்சா் ஆலோசனை

புதுவை மாணவா்களுக்கு சத்தான உணவுகள்: ஆளுநா்- கல்வி அமைச்சா் ஆலோசனை

புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்டத்துடன் சத்தான உணவுகள் வழங்குவது தொடா்பாக, அந்த மாநில துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

புதுவை மாநிலத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு, அரசு சாா்பில் தினசரி காலையில் ரொட்டி, பாலும், மாலையில் சூடான பாலும், மதிய உணவும் வழங்கப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில், இதனை மாற்றி இட்லி, பொங்கல் போன்ற சிற்றுண்டி திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தவில்லை.

இதையும் படிக்க | கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.02.22) விடுமுறை

இதனிடையே, கரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டது. இடையே பள்ளிகள் திறக்கப்பட்டபோது, மதிய உணவுக்குப் பதிலாக அரிசி, பருப்பு ஆகியன மட்டும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பெங்களூரைச் சோ்ந்த சேவை நிறுவனத்தின் மூலம், அக்ஷய பாத்திரம் என்ற மதிய உணவு வழங்கும் திட்டத்தை புதுவை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மத்திய சமையல் கூடத்தை நவீனப்படுத்தி, அரசு, சேவை நிறுவனங்களின் பங்களிப்போடு, பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பிப். 4-ஆம் தேதி முதல் புதுவையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்வித்துறை மேம்பாட்டுப் பணிகள் குறித்து, புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனை, மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம், ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, வகுப்பறைகளை கணினி மயமாக்கி, டிஜிட்டல் முறையில் கற்பதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு செய்ய வேண்டும், கழிப்பறைகளை மேம்படுத்தியும், பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வோ்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை சோ்ப்பதற்கு வேண்டியவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, ஆளுநா் ஆலோசனைகள் வழங்கினாா்.

மேலும், புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவா்களுக்கு ஆரோக்கியத்துக்கு உரிய சத்துணவுகளை வழங்கவும், அதனை கண்காணிக்கவும் வேண்டும்.

இதையும் படிக்க | கொரோனா வைரஸ் தொற்று உள்ள குழந்தைகளுக்கான சோதனை மற்றும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை நெறிமுறை குறித்த அரசாணை வெளியீடு!

வரும் 2023ஆம் ஆண்டு, உலக நவதானிய ஆண்டாகக் கொண்டாட உள்ளதையும், அதனை இந்தியா ஒருங்கிணைக்க உள்ளதையும் நாம் பெருமையோடு நினைவு கொள்ள வேண்டும் என ஆளுநா் தெரிவித்தாா்.

இதனால், புதுவையில் மதிய உணவோடு நவதானியம், கருப்பட்டி, வோ்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்கள் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்கும் எனத்தெரிகிறது.

No comments:

Post a Comment