தமிழக பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.
இந்தக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மசோதா கொண்டுவரப்பட்டது என ஆளுநர் கூறியிருப்பது தவறானது. பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் மசோதா மீதான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்துமே தவறானவை.
அரசியமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தனிச்சையாக முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். நீதிபதி ஏ.கே.ராஜனின் குழுவை ஆளுநர் அவமதித்துவிட்டார்.
வசதியனாவர்கள் பல முறை தேர்வு எழுதுவதற்கும், பயிற்சி மையத்தில் படிப்போருக்கும் சாதகமாக நீட் தேர்வு உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு சட்டப்பேரவை சட்டத்தையே இயற்றக்கூடாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
இதனைத் தொடர்ந்து, மசோதா மீது அனைத்துக் கட்சியினரின் விவாதத்திற்கு பிறகு தமிழக பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.
இந்தக் கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மசோதா கொண்டுவரப்பட்டது என ஆளுநர் கூறியிருப்பது தவறானது. பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகே மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் மசோதா மீதான ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்துமே தவறானவை.
அரசியமைப்பின்படி ஆளுநர் செயல்படாமல் தனிச்சையாக முடிவெடுத்து மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். நீதிபதி ஏ.கே.ராஜனின் குழுவை ஆளுநர் அவமதித்துவிட்டார்.
வசதியனாவர்கள் பல முறை தேர்வு எழுதுவதற்கும், பயிற்சி மையத்தில் படிப்போருக்கும் சாதகமாக நீட் தேர்வு உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு சட்டப்பேரவை சட்டத்தையே இயற்றக்கூடாது எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
இதனைத் தொடர்ந்து, மசோதா மீது அனைத்துக் கட்சியினரின் விவாதத்திற்கு பிறகு தமிழக பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படவுள்ளன.
No comments:
Post a Comment