குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ஆட்சியர் அறிவிப்பு - கடைசி தேதி 21, 01, 2022 - Daily Dhuniya

Breaking

Friday, January 7, 2022

குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ஆட்சியர் அறிவிப்பு - கடைசி தேதி 21, 01, 2022

தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ. ஆ. ப. அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ .ஆ .ப . அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணி யிடங்கள் 1 வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு கீழ்கண்ட பதவிக்கேற்ப அரசு அறிவித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும்.

குற்றவியல்/கல்வியியல் / குழந்தை வளர்ச்சி/ உளவியலாளர் / சமூகப்பணி/ சமூகவியல்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொழில், கல்வி, சமூகநலம், குழந்தைநலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

(பொது வயது40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது விண்ணப்பதாரர்களுக்கு) (அ) ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 62 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது ( ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருக்க கூடாது)

மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Passport size) 21, 01, 2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

No comments:

Post a Comment