பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள Paytm - Daily Dhuniya

Breaking

Thursday, August 11, 2022

பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள Paytm

டிஜிட்டல் பேமன்ட் செயலியான பேடிஎம், நேரடி ரயில் நிலவரத்தை பயனர்கள் அறிந்துகொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பேடிஎம் பயனர்கள், இனி இரு ரயில் நிலையம் இடையே ஓடிக்கொண்டிருக்கும் ரயில் நிலவரத்தை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் மேப் மூலம் ரயில் தகவல்களை அறிந்துகொள்ள வசதி உள்ளது.

ரயில் நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியுமென்றாலும் அதிக தகவல்களை பெற முடியாது.

அதற்கு ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்துக்கு சென்று தான் ரயிலின் தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

கூடுதலாக பேடிஎம் செயலியில், பயனர்கள் ரயிலின் தற்போதைய நிலவரம், அடுத்த ரயில்நிலையம் குறித்த தகவலை பெறலாம்.

நேரடி ரயில் வருகையுடன், ரயில் பயணத்தின் போது, முன்பதிவுக்கு பிந்தைய அனைத்து விதிமுறைகளையும் இப்போது சரிபார்க்க முடியும்.

மேலும் உணவு, டிக்கெட் புக்கிங், பி.என்.ஆர் ஸ்டேட்டஸ், மற்றும் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையை பெற இயலும்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வாடிக்கையாளர் சேவையை டிக்கெட் முன்பதிவு சேவையில் பெறலாம்.

மூத்த குடிமக்களுக்கு, ரயிலில் கீழ் படுக்கை (லோயர் பர்த்) வசதியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

யு.பி.ஐ வழியாக டிக்கெட் கட்டணத்தை செலுத்துவதற்கு எவ்வித கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது.

கடைசியாக, பேடிஎம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள், ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய மறைமுக கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

No comments:

Post a Comment