அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி சோ்க்கை - Daily Dhuniya

Breaking

Sunday, August 28, 2022

அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி சோ்க்கை

திருப்பட்டினம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி சோ்க்கை நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் டி.சிவகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலையத்தில் பயிற்சிப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான உடனடி சோ்க்கை ஆக.29 முதல் நடைபெறவுள்ளது.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவிகள், தகுந்த சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, குடியிருப்பு, சாதி) பயிற்சி நிலைய முதல்வரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04368-234248, கைப்பேசி - 6381145526 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment