கற்றலும் கற்பித்தலும் மனித மனங்களுக்கிடையே நிகழும் ஓர் அற்புத நிகழ்வு - Daily Dhuniya

Breaking

Sunday, August 21, 2022

கற்றலும் கற்பித்தலும் மனித மனங்களுக்கிடையே நிகழும் ஓர் அற்புத நிகழ்வு

📌📌📌 *கற்றலும் கற்பித்தலும் மனித மனங்களுக்கிடையே நிகழும் ஓர் அற்புத நிகழ்வு*

📌📌📌 *கொடுக்கின்ற மனமும் - பெறுகின்ற மனமும் இங்கே சரியான இலகுவான அலைவரிசையில் செயல்பட்டால் மட்டுமே இலக்கினை சரியாக எட்டிட முடியும்*

📌📌📌 *கடந்த காலங்களில் ஒரு ஆசிரியர் எத்தனை மணி நேரம் -திட்டமிடல்- கற்பித்தல் -மதிப்பிடுதல் -பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று உளவியல் ரீதியாக வகுக்கப்பட்டு கல்வித்துறை சரியான பாதையில் செயல்பட்டு வந்தது*

📌📌📌 *அதனால்தான் படைப்பாற்றலோடு கூடிய பன்முக திறன் கொண்ட சமுதாயத்தை அப்போது கட்டமைக்க முடிந்தது*

📌📌📌 *களத்தில் அனுபவமே இல்லாதவர்களின் கீழ் கல்வித்துறை - பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடமே எடுத்திராத (B.Ed. பயிற்சியில் எடுப்பதல்ல வகுப்பனுபவம்) கல்வி அதிகாரிகள்- அதனால் உளவியல் சாரா அணுகுமுறைகள்- ஆய்வகத்தில் தவளையை மட்டுமே அறுத்து பார்த்த ஒரு மருத்துவரை- Operation theater க்குள்ள விட்டது போலவே சில நேரடி அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளன*

📌📌📌 *கல்வித்துறைக்குள்ளும் அரசியல் புகுந்து அநியாயம் செய்கிறது*

📌📌📌 *தான் கொண்டுவந்த திட்டம் என்பதற்காகவே பல பயனற்ற திட்டங்கள் ஈகோ காரணமாக இன்னமும் கல்வித்துறையில் தொடர்கிறது* உதாரணமாக

🌸🌸🌸🌸🌸🌸🌸

*ITK திட்டம் கொரோணா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்டது-தற்போது 100% பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும் அதற்கு நிதி ஒதுக்கீடு- பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஆற்றல் - ஆசிரியர் பயிற்றுநர்களின் ஆற்றல் என மனிதஆற்றலையும்- நிதியையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது*

📌📌📌 *கற்பித்தல் என்ற பிரதான நோக்கத்திற்காக வந்த ஆசிரியர்களை முழுமையாக செயல்பட விடாமல் இடைவிடாத பணிச்சுமையை தருகிறார்கள்*

🍇• *Emis Attendance*

🍇• Emis ல் Biodata

🍇• *Emis. ல் TC*

.🍇 *emis.ல் Eye screening test*

🍇 *emis ல் BMI விவரம்*

🍇 *Emis ல் சாப்பிட்ட உணவு விவரம்*

🍇 *emis ல் மதிப்பெண்கள்*

🍇 *emis ல் Free scheme*

🍇 *online schorship*

*Online வேலை வாய்ப்பு பதிவு

*Online Exam apppication

*online exam

*அதுமட்டுமல்லாமல்

🍇 *Student attendance register*

🍇 *worke done register*

*mark register*

*CCE records 3*

*weekly lesson plan register*

*இலவச பாடப்புத்தகங்கள்*

*சீருடை*

*நோட்டுப்புத்தகங்கள்*

*மடிக்கணிணி*

*மிதிவண்டி* உட்பட அனைத்து இலவச பொருட்களையும் ஓரிடத்தில் இருந்து ஆட்டோவில் ஏற்றி இறக்கி போர்ட்டர் வேலை பார்த்து கொண்டு வந்து-வழங்குதல்

இது போல பல பணிச்சுமைகளுக்கு இடையே உள்ள மிச்ச மீதி நேரத்தில் *Syllabus முடிச்சு Slilp test-weekly test-monthly test-term test* என அனைத்தையும் நடத்தி- *கட்டுரை- பேச்சு- பாட்டு-கலை நிகழ்சி என பல்வேறு வகையான போட்டிகளுக்கும் மாணவர்களை தயார் செய்து-100% தேர்ச்சியும் வழங்கனுமாம்*

*தற்போது தினமும் ஒரு Notes of lesson*

*ஒவ்வொரு Period க்கும் lesson plan எழுதனுமாம்*

*ஒவ்வொரு மாணவனுக்கும் கற்றல் அடைவுகளை தினம்தோறும் பதிவு செய்யனுமாம்*

*உதவாத பல திட்டங்களுக்கு மலிவான செயலிகளை(App) தந்து தினந்தோறும் ஆசிரியர்களை கைப்பேசிக்கும்- கணினிக்கும் அல்லாட வைக்கிறார்கள்- App நாள் கணக்கில் சுற்றிக் கொண்டே இருக்கிறது- ஆசிரியர்களின் தலையும் சேர்ந்தே சுற்றுகிறது*

*குறிப்பாக வகுப்பாசிரியர்களும்-உதவி தலைமையாசிரியர்களும்- தலைமையாசிரியர்களும் படும் மன உளைச்சல்கள் எண்ணிலடங்கா*

*வெறும் Data பணிகளுக்காக மட்டுமே மனதளவிலும், உடலளவிலுமாக ஆசிரியர்களின் 80% சக்திகள் உறிஞ்சி விடுகிறார்கள்.*

*கல்வித்துறையை முற்றிலும் தனியார் மயமாக்கிவிட நினைக்கும் மனப்போக்கோ என்னவோ*

*வருங்காலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணி என்பதை யாரும் விரும்பாத நிலை உருவாகும் என்பது உறுதி*

*சுதந்திரம் என்பது கற்றலில் மட்டுமல்ல கற்பித்தலிலும் இருக்க வேண்டும்*

*விவசாயம் செய்து வரும் ஒருவன் வயலில் இறங்கி கலையெடுக்கும் போதும், உரமிடும்போதும் பயிருக்கு வலிக்கத்தான் செய்யும்*

*மருத்துவர் குணப்படுத்த முயலும்போது நமக்கு வலிக்கவும், மருந்து தரும் போது கசக்கவும் செய்வதுதான் இயல்பு*

*சரியான மனப்பான்மையோடு நல்ல குடிமகன்களை உருவாக்க வேண்டும் எனில் பள்ளிகள் பட்டறைகளாகவும் இருக்க வேண்டும்*

*அதை விடுத்து மாணவர் மனம் நோகக்கூடாது, உடல் வருந்தக்கூடாது என்ற முட்டாள்தனமான வாதங்களை முன் வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் கரங்களை கட்டிவிட்டு போலீஸ் கரங்களுக்கு கூடுதல் வலிமையை தருவதில் எந்த பயனும் இல்லை என்பதை ஆட்சியாளர்களும்- பெற்றோர்களும் உணர வேண்டும்*

*முதலில் ஆசிரியரை சுதந்திரமாக அவரது பாணியில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள விடுங்கள்*

*எடுபிடி வேலைகளுக்கும்- மூட்டை தூக்கும் வேலைகளுக்கும் புள்ளிவிவரம் போன்ற பணிகளுக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தாதீர்கள்*

*அதற்காக தனியாக பணியாளரையும், அலுவலரையும் நியமனம் செய்யுங்கள்*

*ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை மட்டுமே தந்து- சுதந்திரம் தந்தால் மட்டுமே கல்வித்துறையும்- சமுதாயமும் உறுப்படும்*

*நம்மிடம் இருந்த கற்றல் கற்பித்தலை உதவி பெறாத தனியார் பள்ளிகள் தற்போது பின்பற்றுகின்றார்கள்*

கல்வித்துறை EMIS என்ற தனியாரிடம் அடமானமாக உள்ளது.

*மாணவர்கள் உயர சமூகம் உயரும்* _நன்றி!_

No comments:

Post a Comment