மாநிலம் முழுவதிலும் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய உத்தரவு - Daily Dhuniya

Breaking

Friday, July 1, 2022

மாநிலம் முழுவதிலும் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கை ஆய்வு செய்ய 20 கல்வி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிகளுக்கு உரிய முறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, வரவு செலவு கணக்குகள் விவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமாருக்கு வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள் வரும் 31 ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment