அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Daily Dhuniya

Breaking

Monday, May 9, 2022

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படும் என, வாக்குறுதி அளித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

ஆனால் ஆட்சி அமைத்த பின், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது.இத்திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழக அரசு அறிவிக்கக்கோரி, ஊழியர்கள் கோஷமிட்டனர். இதில் 30 பெண்கள் உட்பட 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment