தேர்வு மையங்கள் அதிக தூரம் 52 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை - Daily Dhuniya

Breaking

Wednesday, May 11, 2022

தேர்வு மையங்கள் அதிக தூரம் 52 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை

ரயில்வே தேர்வு

ரயில்வேயின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வு இரண்டு கட்டமாக மே 9, 10ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்காக 1,80,882 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,28,708 மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

52 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை

52,174 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சொந்த ஊர் அல்லது மாநிலத்தில் இருந்து பல நூறு கிமீ தூரத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் ஏறக்குறைய 34% பேர் தேர்வு எழுத முடியாத நிலைக்கு ஆளாகினர் என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment