வேலைவாய்ப்பு செய்திகள்: தலைமை காவலர் பணி& விமான நிறுவனத்தில் வேலை - Daily Dhuniya

Breaking

Monday, May 23, 2022

வேலைவாய்ப்பு செய்திகள்: தலைமை காவலர் பணி& விமான நிறுவனத்தில் வேலை

வேலைவாய்ப்பு செய்திகள்

தலைமை காவலர் பணி

டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெல்லி போலீசில் ஸ தலைமை காவலர் (அமைச்சகம்) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆண்கள் (503), முன்னாள் ராணுவ வீரர்கள் (56) பெண்கள் (276) என மொத்தம் 835 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் வேகமாக தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 1-1-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட் பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வும் அனுமதிக்கப்படும்.

தகுதியான நபர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான உடல் தகுதி, தேர்வு செய்யப் படும் விதம் உள்ளிட்ட விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-6-2022. விமான நிறுவனத்தில் வேலை

விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாளும் அமைப்பான ஐ.ஜி.ஐ. ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் வாடிக் கையாளர் சேவை முகவர் பணியில் 1095 பேரை நியமிப்பதற்கான அறி விப்பு வெளியாகி உள்ளது.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விரிவான விவரங்களை https:/igiaviationdelhi.com/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment