நாளை (மே 27) தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Daily Dhuniya

Breaking

Thursday, May 26, 2022

நாளை (மே 27) தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, மே 25: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற் றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வேலை வழங் குவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேர டியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தேர்வு செய்வதற்கான முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப் ளமோ, ஐடிஐ மற்றும் தொழிற்கல்வித் தகுதி உடையோர் கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகி யவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண் டும். இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரது வேலை வாய்ப்பு பதிவு எதுவும்ரத்து செய்யப்படமாட்டாது. முகா மில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாய்ப்பகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment