தேர்வு கண்காணிப்புக்கு 37 அதிகாரிகள் குழு - Daily Dhuniya

Breaking

Saturday, April 23, 2022

தேர்வு கண்காணிப்புக்கு 37 அதிகாரிகள் குழு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு, மே 5ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடக்காமல், கண்காணிக்கும் வகையில், 37 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில், சுதன், மணிகண்டன் மற்றும் இளம்பகவத் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; சேதுராமவர்மா, அறிவொளி, ராமேஸ்வர முருகன். கண்ணப்பன், உமா, பழனிசாமி, கருப்பசாமி, லதா, நாகராஜ முருகன் மற்றும் குப்புசாமி ஆகிய இயக்குனர்கள்; 19 இணை இயக்குனர்கள் மற்றும் ஐந்து துணை இயக்குனர்கள் இடம் பெற்று உள்ளனர்.

பொதுவாக துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இப்பணி ஒதுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, தலைமை பொறுப்பில் உள்ள கமிஷனர் நந்தகுமாருக்கு வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment