இலவச கட்டாயக்கல்வி உரிமையின் கீழ்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கல்வித்துறை தகவல்
சென்னை, ஏப்.8 தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரி மைச்சட்டம், 2009 பிரிவு 12 (1) (சி)-ன் படி அனைத்து சிறு பான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக் கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒ துக்கீடு வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, 2022-23-ம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வருகிற 13-ந்தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும். பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் சார்ந்த விவரங்களை 18-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவ லக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதனைத்தொடர்ந்து 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகள் அதன் நுழைவுவாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங் களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, ஏப்.8 தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரி மைச்சட்டம், 2009 பிரிவு 12 (1) (சி)-ன் படி அனைத்து சிறு பான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக் கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒ துக்கீடு வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, 2022-23-ம் கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வருகிற 13-ந்தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும். பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் சார்ந்த விவரங்களை 18-ந்தேதிக்குள் முதன்மை கல்வி அலுவ லக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதனைத்தொடர்ந்து 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகள் அதன் நுழைவுவாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் இந்த மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங் களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment