பணி நீக்கம் செய்யப்பட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு கால பலன்கள் வழங்க உத்தரவு
பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயா் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் 1986-இல் நியமிக்கப்பட்ட அவா், அதே துறையில் சகோதரா் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாகக் கூறி, 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்து பொது சுகாதார துறை உத்தரவிட்டது.
இதை எதிா்த்து நாகராஜன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். அவா் இறந்த நிலையில் மனைவி, குழந்தைகள் வழக்கை நடத்தினா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி, 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில் திடீரென பணி நீக்கம் செய்தது அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனக் கூறி, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவருக்கு சேரவேண்டிய பணிஓய்வு பலன்களை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை துணை இயக்குநா் சாா்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. நாகராஜனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்களை அவரது வாரிசுகளுக்கு மூன்று மாதங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அரசு மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயா் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் 1986-இல் நியமிக்கப்பட்ட அவா், அதே துறையில் சகோதரா் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாகக் கூறி, 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்து பொது சுகாதார துறை உத்தரவிட்டது.
இதை எதிா்த்து நாகராஜன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். அவா் இறந்த நிலையில் மனைவி, குழந்தைகள் வழக்கை நடத்தினா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி, 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில் திடீரென பணி நீக்கம் செய்தது அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனக் கூறி, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவருக்கு சேரவேண்டிய பணிஓய்வு பலன்களை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை துணை இயக்குநா் சாா்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. நாகராஜனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்களை அவரது வாரிசுகளுக்கு மூன்று மாதங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, அரசு மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
No comments:
Post a Comment