ரயில்வே பணியாளர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 7.05 லட்சம் பேர் தகுதி - Daily Dhuniya

Breaking

Tuesday, January 18, 2022

ரயில்வே பணியாளர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 7.05 லட்சம் பேர் தகுதி

ரயில்வே பணியாளர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 7.05 லட்சம் பேர் தகுதி

மதுரை,ஜன.17:ரயில்வே துறையில் பணியாளர்கள் காலிப்பணி யிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 7.05 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர் என ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது.

இதுதொடர்பாகமதுரை கோட்ட ரயில்வே அலுவலகம் திங் கள்கிழமை வெளியிட்ட செய்தி: ரயில்வேத் துறையில் உதவியா ளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் உள்ளிட்ட 13 பதவிக ளுக்கான 35,281 காலிப்பணியிடங்கள் ஐந்து பிரிவுகளாக பிரிக் கப்பட்டு முதல் கட்டத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது.

இணையதளம் வாயிலாக நடைபெற்ற முதல் கட்டத் தேர்வு முடிவுகள் ஜனவரி 14 -ஆம் தேதி ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டது. இதில், இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 7 லட்சத்து 5. ஆயிரத்து 620 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து மூன்றாம் கட்டத் தேர்விற்கு பணியிடங்களில் 8 மடங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதியாக 35, 281 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பணி யில் அமர்த்தப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், இரண்டாம் கட்டத் தேர்வுக்கு பணியி டங்களைக் காட்டிலும் பத்து மடங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 20 மடங்கு விண் ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment