மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: கல்வித்துறை அறிவுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Monday, November 29, 2021

மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை, நவ. 29: தமிழகத்தில் தனி யார் மழலையர், ஆரம்பப் பள்ளி களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சில வழிகாட்டுதல் களை பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தனியார் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கு அங் கீகாரம் வழங்குவது தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வரு கின்றன.

இந்த நிலையில் தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட் முதன்மைக்கல்வி அதிகா
ரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற் றறிக்கை விவரம்: தனியார் மழலை யர் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், நில அளவு உள்பட விவரங்களை முறையாக ஆய்வு செய்த பின்னர் உரிய அங்கீகா ரம் வழங்குவதற்கான கருத்துருவை முதன்மைக்கல்வி அதிகாரிகள் பரிந் துரைக்க வேண்டும்.

அதன்படி அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பள்ளிகள் அமைந் துள்ள இடம் மாநகராட்சி எனில் 6 கிரவுண்ட், மாவட்டப் பகுதியில் 8 கிர வுண்ட் இருக்க வேண்டும். நகராட்சி எனில் 10 கிரவுண்ட், பேரூராட்சி பகு

தியில் ஒரு ஏக்கர் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.அதேபோல், பள்ளி தொடங்கும்முன் மாணவர்கள் எண் ணிக்கைக்கேற்ப பதிவுக் கட்டண மும், வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும்.

பள்ளி கட்டட உரிம சான்று கள் கழிப்பறை, நூலக வசதிகள் உள் ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அங்கு பணிபுரி யும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வங்கிக்கணக்கிலேயே செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment