கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தகவல் - Daily Dhuniya

Breaking

Monday, October 11, 2021

கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தகவல்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறு பான்மையினராக உள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீகரிக் கப்பட்ட தனியார் கல்வி நிலையங்க ளில் 2021-22ம் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொ கையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ஐஐடி, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவி லியர் ஆசிரியர் பட்டப்படிப்பு இளங் கலை, முது கலை பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்க ல்வி மற்றும் தொழிலுக்கு தொழில்நுட் பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற் றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு இந்திய அரசின் www.scholarships. gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான மாணவ, மாணவிகள்பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15.11.21 வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொ கைக்கு 30.11.2021 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப் பிக்கலாம்.

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (NSP) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையங்கள், தங்களது பள்ளி நிலையத்திற்கான ஒருங் கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரி பார்க்க இயலும். புதியதாக விண்ணப் பிக்கும் மாணவ, மாணவிகள் இணை யதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்க ளும் தங்களது DISE AISHENCVT என்ற குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லரை தொடர்பு கொள்ளலாம். இவ் வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment