மழலையர், நர்சரி பள்ளிகள் நவ.1ல் திறக்கப்படுமா? - - Daily Dhuniya

Breaking

Saturday, October 23, 2021

மழலையர், நர்சரி பள்ளிகள் நவ.1ல் திறக்கப்படுமா? -

சென்னை: மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவே பள்ளி செல்லாமல் வீடுகளில் அடைபட்டு கிடந்தனர். கடந்த ஜனவரி மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சில வாரங்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலேயே ஆல்பாஸ் ஆகி அடுத்த வகுப்புக்கு சென்று விட்டனர். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment