போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வாபஸ் - Daily Dhuniya

Breaking

Tuesday, September 7, 2021

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வாபஸ்

தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “கடந்த 2017ஆம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும். போராட்டத்தில் ஈடுபட்டதால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பழைய இடங்களுக்கே மாற்றப்படுவார்கள். ADVERTISEMENT ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரி செய்யப்படும். அரசு ஊழியர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் இனி நிறைவேற்றப்படும்.”

No comments:

Post a Comment