பள்ளி புத்தக பைகளில் தலைவர்கள் படம்:தமிழக அரசிற்கு ஐகோர்ட் அறிவுரை - Daily Dhuniya

Breaking

Monday, September 6, 2021

பள்ளி புத்தக பைகளில் தலைவர்கள் படம்:தமிழக அரசிற்கு ஐகோர்ட் அறிவுரை

‛‛தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படத்தை அச்சிட்டு அரசின் பணத்தை வீணாக்கக்கூடாது,'' என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி பாடப்புத்தகங்களில் தலைவர்கள் படம் அச்சிடப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: பள்ளி புத்தக பைகளில் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிடக்கூடாது. அரசின் நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், புத்தக பைகளில் தலைவர்கள் படம் அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை. ஏற்கனவே தலைவர்கள் படம் போட்டு அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள் மற்றும் 10 லட்சம் எழுது பொருட்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். வீணடிக்கப்பட மாட்டாது என்று உத்திரவாதம் அளித்தார். தலைவர்கள் படம் அச்சிடப்பட்ட புத்தகப் பைகளை கைவிடும்படி அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிரான மனு முடித்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment