இதன் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி வெவ்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதமாக குறிப் யிட்ட நாட்களில், நகர் மற்றும் கிராமபுறங்களில் சிறப்புமுகாம்அமைத்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்துநடைபெற்று வருகிறது. தற்போது உயர் நிலை மற் றும் மேல்நிலை பள்ளிகள்திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாது காப்பு கருதி, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கொரோனாபரிசோதனைமேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி பெண்கள் மேல் நிலை பள்ளி உள்ளிட்ட சில பள் ளிகளில் நேற்று, மாணவிக ளுக்கு கொரோனா பரி சோதனை நடைபெற்றது.
இதனை பள்ளி நிர்வா கத்தினர், கல் வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற் கொண்டனர். வரும் நாட்க ளிலும்,அரசு மற்றும் அரசு உதவிபெறம் பள்ளி, தனி யார்பள்ளிகளில்,தினமும் குறிப்பிட்ட மாணவர்கள் வீதம்கொரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment