10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணச் சலுகை - Daily Dhuniya

Breaking

Wednesday, September 22, 2021

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணச் சலுகை

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டணச் சலுகை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.


கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருவதைத் தொடர்ந்து பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்துதற்போது குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனாவால் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டணச் சலுகை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment