சமூக வலைதளத்தில் அளித்த கோரிக்கை ஏற்பு; மாற்றுத்திறனாளி மாணவருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி! - Daily Dhuniya

Breaking

Saturday, July 31, 2021

சமூக வலைதளத்தில் அளித்த கோரிக்கை ஏற்பு; மாற்றுத்திறனாளி மாணவருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி!

திருவாரூர்: நன்னிலத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் அளித்த கோரிக்கையின் பேரில் அவருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆணைகுப்பத்தை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவர் ஜெயதேவ் (12). தனக்கு உதவி வேண்டி சமூக வலைதளத்தில் அளித்த கோரிக்கையின் பேரில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மாணவரை நேரில் அழைத்து அவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறுகையில், மிதமான மன வளர்ச்சிக்குன்றிய இருகால்களும் பாதிக்கப்பட்ட மற்றும் நரம்பியல் புண் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, ரூ.6 ஆயிரத்து 700- மதிப்பிலான சக்கர நாற்காலியும், உடலில் பல பகுதிகளில் காயங்கள் உள்ளதை கருத்தில் கொண்டு தூங்குவதற்கு ஏதுவாக ரூ.6 ஆயிரம்- மதிப்பிலான தண்ணீர் படுக்கை வழங்கப்பட்டது.

மேலும், இச்சிறுவனின் தாயார் ஹேமலதா ஏற்கனவே தையல் தொழில் செய்து வருவதால் மிதமான மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு மோட்டர் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், சிறுவனின் தாயாருக்கு சிறப்பினமாக கருதி ரூ.6 ஆயிரத்து 287- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment