காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Monday, October 3, 2022

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் அறிவிப்பு

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் அறிவிப்பு - மெட்ரிகுலேசன் பள்ளிகளும் காலாண்டுத் தேர்வு முடிந்து 10.10.2022 அன்று திறக்கப்பட்டு செயல்படவேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு - Date of opening of schools after quarter examination vacation - Notice of Director of Matriculation Schools - Notice of Director of Matriculation Schools that matriculation schools should also be opened and functional on 10.10.2022 after the end of quarter examination.

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 3735/அ1/2022,நாள் 30.09.2022

பொருள்.

பள்ளிக் கல்வி - மெட்ரிகுலேசன் பள்ளிகள் 2023ஆம் கல்வியாண்டு காலாண்டுத் தேர்வு முடிவுற்று விடுமுறை அளித்தல்-தொடர்பாக.

பார்வை.

பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய செய்திக் குறிப்பு நாள் 27.09.2022.

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்விக் இயக்ககக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பள்ளிகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து பார்வையில் உள்ளவாறு முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மெட்ரிகுலேசன் பள்ளிகளும் காலாண்டுத் தேர்வு முடிந்து 10.10.2022 அன்று திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது.

இச்சுற்றறிக்கையினை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment