நீட் விலக்கு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Saturday, September 3, 2022

நீட் விலக்கு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

நீட் விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தைச் சோ்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாா். அவரது குடும்பத்துக்கு அனுதாபங்கள்.

மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே இரு முறை நீட் தோ்வு எழுதியுள்ளாா். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவா்களுக்கு நீட் தோ்வு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூா் முரளிகிருஷ்ணா, அரியலூா் நிஷாந்தி ஆகிய மூவா் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டனா். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும் தற்கொலைகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும்.

நீட் சட்டத்துக்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும், மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment