Joint Director of School Education orders to surrender vacant post of Agriculture graduate teacher without admission - மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Saturday, September 17, 2022

Joint Director of School Education orders to surrender vacant post of Agriculture graduate teacher without admission - மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி தொழிற்கல்வி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட வேளாண்மை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையின்றி வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி (ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட்டவர்கள்) ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை தொகுப்பிற்கு ஒப்படைக்கக் கோருதல்-சார்ந்து. ஆணையரின் பொதுத்

பார்வை:

1. அரசாணை (நிலை) எண். 129 பள்ளிக் கல்வித்துறை, நாள். 18.05.1999

2. அரசாணை (நிலை) எண். 63 பள்ளிக் கல்வித் (விஇ) துறை நாள். 13.03.2007. 3. அரசாணை (நிலை) எண். 143 பள்ளிக் கல்வித் (விஇ) துறை நாள். 02.07.2008.

பார்வை 1 முதல் 3 வரையுள்ள அரசாணைகளில் தமிழகத்தில் வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

தொழிற்கல்வி ஆசிரியர் இவற்றில் மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி (ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து நியமனம் செய்யப்பட்டவர்கள்) ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.09.2022க்குள் தனிநபர் மூலம் ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு படிவம்.



CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment