ஆசிரியர்கள் அதிருப்தி! - Daily Dhuniya

Breaking

Tuesday, August 16, 2022

ஆசிரியர்கள் அதிருப்தி!

ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்களுக் கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். மத்திய அரசு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு ஜூலை மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கான 6 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட் சிக்கு பிறகு ஆசிரியர்களின் பல் வேறு பணப்பலன்கள் பறிக்கப் பட்டு வருகிறது. வேதனை அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின், தேர்த லுக்கு முன்பாக நடந்த ஜாக் டோஜியோ போராட்டங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் தெரி வித்ததுபோல், மத்திய அரசுக்கு இணையான எல்லா பணப்பலன் களையும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment