ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022 - Daily Dhuniya

Breaking

Monday, August 1, 2022

ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022

ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சித்துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் குறித்த விவரம்: 

பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர்(ஒப்பந்த அடிப்படையில்)

மொத்த காலியிடங்கள்: 21

1. காளையார்கோவில் - 03
2. கல்லல் - 01
3. சாக்கோட்டை - 01
4. திருப்பத்தூர் - 01
5. சிங்கம்புணரி - 01

சம்பளம்: மாதம் ரூ.12,000

தகுதி: பட்டப்படிப்பு, அதற்கு மேலும் கணினி படிப்பில் 6 மாதம் பட்டயப்படிப்பு (எம்எஸ் ஆபிஸ்) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

பணி அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022
 
மேலும் விவரங்கள் அறிய https://sivaganga.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/07/2022072599.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment