"நீட்" தள்ளிவைக்க கோரிய மனு - நாளை விசாரணை - Daily Dhuniya

Breaking

Wednesday, July 13, 2022

"நீட்" தள்ளிவைக்க கோரிய மனு - நாளை விசாரணை

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல்....

ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் இளம் நிலைத் தேர்வை தள்ளிவைக்க கோரியும், நீட் தேர்வில் பங்கேற்க மேலும் ஒரு வாய்ப்பை வழங்கக் கோரியும் அனுபா ஸ்ரீவாஸ்தவா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் வழக்குரைஞர் மம்தா சர்மா முறையிட்டார்.

முறையீட்டை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம் நாளை இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment