தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - விரைவில் தொடக்கம். - Daily Dhuniya

Breaking

Thursday, July 14, 2022

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - விரைவில் தொடக்கம்.

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - விரைவில் தொடக்கம்.

1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு.திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது.

காலை 5 : 30-7 : 45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும் , காலை 8 : 15-8 : 45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு.

தமிழகத்தின் முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment