மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.7.2022) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1277 நாள் : 29.07.2022 - Daily Dhuniya

Breaking

Thursday, July 28, 2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.7.2022) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1277 நாள் : 29.07.2022

செய்தி வெளியீடு எண்: 1277

நாள் : 29.07.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.7.2022) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று ஆற்றிய உரை

42- ஆவது அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய முதன்மை விருந்தினராக வருகை தந்து சிறப்பித்துக் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே!

மாண்புமிகு தமிழ்நாடு திரு. ஆர்.என்.ரவி அவர்களே!

பட்டமளிப்பு விழாவில் கொண்டிருக்கும் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான முனைவர் பொன்முடி அவர்களே!

மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் அவர்களே! துணைவேந்தர் பேராசிரியர் திரு. வேல்ராஜ் அவர்களே!

மாண்புமிகு உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், இ.ஆ.ப., உள்ளிட்ட அரசு அதிகாரிகளே!

வணக்கத்திற்குரிய பெருநகர சென்னை மாநகர மேயர் அவர்களே! பேராசிரியப் பெருமக்களே!

பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய மாணவ, மாணவியர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று நம்முடைய மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் என்பது இந்தியாவில் நடப்பது இதுதான் முதல்முறை, ஆசியாவில் நடப்பது மூன்றாவது முறை என்கின்ற உலகளாவிய பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. உலகச் சதுரங்க அரங்கில் இந்தியாவின் மதிப்பு நேற்று முதல் வானளாவிய அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

No comments:

Post a Comment