ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் :முதல்வர் - Daily Dhuniya

Breaking

Sunday, December 19, 2021

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் :முதல்வர்

போராட்ட காலங்களில் ஆசிரியர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை மாதவரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின்14ம் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் பொற்கால ஆட்சியாகவே இருந்துள்ளது. அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. தமிழ்நாட்டில் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஏராளமான நலத் நலத்திட்டங்கள திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அரசு எப்போதும் நிறைவேற்றும். அதில்நான் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளேன். நீங்கள் அரசு ஊழியர் நான் மக்கள் ஊழியன். இது தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இது தான். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலத்தை பணி காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் சரி செய்யப்படும் என அறிவித்ததும் திமுக தான். நான் அதிகம் பேச மாட்டேன். செயலில் தான் காட்டுவேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment