மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்கள் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.
"ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1138 பள்ளிகளில் பயிலும்
83,259 மாணாக்கரின் கல்வி நலனை உறுதி செய்யும் பொருட்டும், மாணாக்கரின்
கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையிலும், 150
பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல்
ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும்."
மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ரூபாய் நூறு கோடி மதிப்பீட்டில் 29 மாவட்டங்களில் உள்ள 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு 480 புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 15 ஆய்வகக் கட்டடங்களை கட்டித் தருவதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்:104,ஆ.தி.(ம)ப.ந. (ஆதிந2(1)) துறை, நாள் : 07.12.2021-ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
Monday, December 20, 2021
Home
G.O
Press Release
Schools
150 ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் ரூ.100 கோடி செலவில் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்ட அரசாணை வெளியீடு - அரசு செய்திக் குறிப்பு வெளியீடு!!
150 ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் ரூ.100 கோடி செலவில் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்ட அரசாணை வெளியீடு - அரசு செய்திக் குறிப்பு வெளியீடு!!
Tags
# G.O
# Press Release
# Schools
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Schools
Tags:
G.O,
Press Release,
Schools
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment