பள்ளிகளில் பழுதான அறைகளை பயன்படுத்தக்கூடாது - வடகிழக்கு பருவமழை பாதிப்பில் மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை - சிஇஓக்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு - Daily Dhuniya

Breaking

Wednesday, November 10, 2021

பள்ளிகளில் பழுதான அறைகளை பயன்படுத்தக்கூடாது - வடகிழக்கு பருவமழை பாதிப்பில் மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை - சிஇஓக்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

வடகி ழக்கு பருவமழை பாதிப் புகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவுகளை பிறப்பித்து சிஇஓக்களுக்கு பள்ளி கல் வித்துறை சார்பில் சுற்ற றிக்கை அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அ லர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது:

மி ழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக பள்ளிகளின் சுற்றுச்சு வர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாண வர்கள் யாரும் செல்லாத வாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். மழையின் கார ணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப் பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைத்து, அவற்றின் அருகே யாரும் செல்லாத வகையில் தடுக்க வேண் டும்.

மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? மின் கசிவு, மின்சுற்று கோளா றுகள் ஏதேனும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்ப டுத்த வேண்டும். தேவை யெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத் தப்படுகிறது. இத்தகைய நேரங்களில் மின்வாரிய பொறியாளரை உடனடி யாக தொடர்புகொண்டு இதனை சரி செய்லாம்.

காய்ச்சலுக்கு தாமதமின்றி சிகிச்சை

பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பருவகால மாற்றங்க ளால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு. சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களி லிருந்து) பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும். காய்ச் சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment