சிறுவர்கள் தவறு செய்தால் பெற்றோருக்கு தண்டனை.. புதிய சட்டத்தால் அதிர்ச்சி! – - Daily Dhuniya

Breaking

Wednesday, October 20, 2021

சிறுவர்கள் தவறு செய்தால் பெற்றோருக்கு தண்டனை.. புதிய சட்டத்தால் அதிர்ச்சி! –

பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டம் சீனாவில் முன்மொழியப்பட்டுள்ளது. பிள்ளைகளின் நடத்தை மோசமாக இருந்தாலும், குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் பெற்றோருக்கு தண்டனை வழங்குவதற்கான சட்டம் சீனாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

குடும்பக் கல்விச் சட்டம் எனப்படும் இச்சட்ட வரைவில், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கண்காணிப்பில் இருக்கும் பிள்ளைகள் தவறு செய்தாலும், குற்றங்களில் ஈடுபட்டாலும், சம்பந்தப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்பக் கல்வி வழிகாட்டல் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.


இதுகுறித்து சீன சட்ட விவகார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாங் டெய்வெய் பேசியபோது, “சிறுவர்கள் தவறாக நடந்துகொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் குடும்பக் கல்வி போதிய அளவில் இல்லாததே முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment