மதுரையில் பல்கலை. கல்லூரியை அரசு கல்லூரியாக்கப் பரிசீலனை - Daily Dhuniya

Breaking

Friday, September 3, 2021

மதுரையில் பல்கலை. கல்லூரியை அரசு கல்லூரியாக்கப் பரிசீலனை

"மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடத்தப்படும் கல்லூரியை அரசு கல்லூரியாக்கப் பரிசீலிக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மதுரை மேற்கு தொகுதி உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ, மதுரையில் இருபாலா் கலைக் கல்லூரி திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். இதற்கு பதிலளித்த அமைச்சா் க.பொன்முடி, மதுரை மாவட்டத்தில் 41 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மாணவா் சோ்க்கை அளவு 29 ஆயிரத்து 189. ஆனால், கடந்த கல்வியாண்டில் சோ்ந்துள்ள மாணவா் எண்ணிக்கை 18 ஆயிரத்து 750. காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 439. மாவட்டத்தில் உள்ள 41 கல்லூரிகளுடன், காமராஜா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஒரு கல்லூரி நடைபெற்று வருகிறது. அது முதலில் மாலை நேரக் கல்லூரியாக இருந்து இப்போது முழு நேரக் கல்லூரியாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க முதல்வருடன் கலந்து பேசி பரிசீலிக்கப்படும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்"

No comments:

Post a Comment