இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து – WHO எச்சரிக்கை !! - Daily Dhuniya

Breaking

Wednesday, July 14, 2021

இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து போட்டால் ஆபத்து – WHO எச்சரிக்கை !!

இருவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளையும் கலந்து செலுத்தினால் ஆபத்து நேரிடும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உலக நாடுகளை எச்சரித்துள்ளார். மேலும் 2 தடுப்பூசிகளையும் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கான எந்த தரவுகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள் :

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய வைரஸ் பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டு அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா இரண்டாம் தற்போது தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இவை உருமாறிய கொரோனா வைரஸ் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனை எதிர்க்க தற்போது அனைத்து நாடுகளும் 2 வகை தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது.


கடந்த சில மாதங்களாக தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை 2 டோஸ் செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் செலுத்திய பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அடுத்த டோஸ் செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் செலுத்திய தடுப்பூசியை தான் 2 டோஸிலும் செலுத்த வேண்டும். ஆனால் சில நாடுகளில் தற்போது இரு வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை கலந்து செலுத்தி கொண்டால் கொரோனாவுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளது.


இவை பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு நாடுகளை எச்சரித்துள்ளது. இரண்டு நிறுவன தடுப்பூசிகளையும் கலந்து செலுத்துவதற்கான எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளபடவில்லை. பலன் தரும் என்பதற்க்கான தரவுகள் இல்லை மேலும் கொரோனா மூன்றாம் அலைக்கானஅறிகுறிகள் தென்படுகிறது. எனவே இந்த இக்கட்டான நேரத்தில் இரண்டு தடுப்பு மருத்துக்களையும் கலந்து செலுத்தி கொள்வது ஆபத்தை தரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நாடுகளை எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment