வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட கோரிக்கை - Demand to abandon retrenchment in regional education offices! - Daily Dhuniya

Breaking

Thursday, September 29, 2022

வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட கோரிக்கை - Demand to abandon retrenchment in regional education offices!

வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட கோரிக்கை!

வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட ஆசிரியர் சங்கம் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் கோரிக்கை!!!



பார்வை :

பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.49138/அ3இ1 நாள்: 26.09.2022

பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு சீரான எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர்களை நிர்ணயம் செய்வது எனும் பெயரில் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் பணியாளர் குறைப்புகள் (ஆட்குறைப்பு) நடைபெற்றுள்ளது. இத்தகு ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது வட்டாரக்கல்வி அலுவலகத்தின் அனைத்து வகைப்பணிகளிலும் கடுமையான நேக்க நிலையை உருவாக்கும் பேராபத்து நிறைந்ததாகும்.

தாங்கள், வட்டாரக்கல்வி அலுவலகத்தின் எதிர்கால களநிலையை கணக்கில் -கவனத்தில் கொண்டு மேற்கண்ட செயல்முறையில் தலையீடு செய்து நிறுத்தி வைத்தும், அரசாணை எண்: 151(பகது) நாள் 09.09.2022 க்கு முந்தைய நிலையினை நிலைநிறுத்திடுமாறும் எங்களது மாநில அமைப்பின் சார்பில் பெரிதும் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்,

சென்னை

28.09.2022

தங்கள் உண்மையுள்ள,

No comments:

Post a Comment