TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது - Daily Dhuniya

Breaking

Sunday, August 7, 2022

TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (Walking Test), வாய்மொழித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்

தமிழ்நாடு வனசார் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் : வனத்தொழில் பழகுநர்

பணியின் பெயர் : தமிழ்நாடு வன சார்நிலைப் பணி

காலியிடங்கள் : 10 சம்பளம் : ரூ: 37,700 - 1,38,500

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை நாள்: 08.08.2022

இணையவழி மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 06.09.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 03.12.2022 (ஒருநாளில் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்படும்)

எழுத்துத் தேர்வு மூன்று தாள்களை உள்ளடக்கியது. முதல் ஷிப்ட் காலை 9 மணிமுதல் 12.30 மணிவரையிலும், 2-வது ஷிப்ட் பிற்பகல் இரண்டு மணிமுதல் ஐந்து மணிவரையிலும் நடைபெறும்.

கல்வித் தகுதி:

வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

( அல்லது )

பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்:



தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு (Walking Test), வாய்மொழித் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment