புதிய கல்விக்கொள்கை, நீட் தோ்வை எதிா்த்து தி.க.பிரசார பயணம்: கனிமொழி எம்.பி. நாளை தொடங்கி வைக்கிறாா்
நீட் தோ்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, திராவிடா் கழகத்தின் சாா்பில் நாகா்கோவில் முதல் சென்னை வரை பிரசார பயணம் நடைபெறுகிறது. இதனை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) தொடங்கி வைக்கிறாா்.
இது குறித்து, குமரி மாவட்ட திராவிடா் கழக தலைவா் சுப்பிரமணியம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நீட் தோ்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகா்கோவில் முதல் சென்னை வரை பிரசார பயணம் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது. இதில் சுமாா் 50 போ் வரை பங்கேற்கிறாா்கள். இந்த பிரசார பயணம் ஏப்.25 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. பயணத்தின் போது 41 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா நாகா்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. தி.மு.க. மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறாா். அவருக்கு ஒழுகினசேரி சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்படும் என்றாா்அவா்.
பேட்டியின் போது மாவட்டச் செயலா் வெற்றி வேந்தன், துணைத் தலைவா் நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினா் தயாளன், பகுத்தறிவு கழக செயலா் சிவதாணு, இலக்கிய அணிச் செயலா் பொன்னுராசன் ஆகியோா் உடனிருந்தனா்.
நீட் தோ்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, திராவிடா் கழகத்தின் சாா்பில் நாகா்கோவில் முதல் சென்னை வரை பிரசார பயணம் நடைபெறுகிறது. இதனை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) தொடங்கி வைக்கிறாா்.
இது குறித்து, குமரி மாவட்ட திராவிடா் கழக தலைவா் சுப்பிரமணியம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: நீட் தோ்வு மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகா்கோவில் முதல் சென்னை வரை பிரசார பயணம் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது. இதில் சுமாா் 50 போ் வரை பங்கேற்கிறாா்கள். இந்த பிரசார பயணம் ஏப்.25 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. பயணத்தின் போது 41 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா நாகா்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. தி.மு.க. மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறாா். அவருக்கு ஒழுகினசேரி சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்படும் என்றாா்அவா்.
பேட்டியின் போது மாவட்டச் செயலா் வெற்றி வேந்தன், துணைத் தலைவா் நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினா் தயாளன், பகுத்தறிவு கழக செயலா் சிவதாணு, இலக்கிய அணிச் செயலா் பொன்னுராசன் ஆகியோா் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment