ஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் - Daily Dhuniya

Breaking

Tuesday, April 19, 2022

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

திருநெல்வேலி, ஏப்.16: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் பயின்று 2017 முதல் 21ஆம் நிதியாண்டுக ளுக்குள் அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார் பில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இம்மாதம் 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தொழில் பழகுநர் களை தேர்வு செய்ய உள்ளன. தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

ஐடிஐ தேர்ச்சி சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அவசியம். தொழில் பழகுநராக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம்தோறும் ரூ. 7,700 முதல் ரூ.8,050 வரை உதவித்தொகை வழங்கப்படும். முடிவில் தேர்வு நடத்தப் பட்டு, தேசிய தொழில்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.

தொழில்பழகுநர் சட்டம் 1961-ன் படி குறைந்தபட்சம் 30-க்குள் பட்டபணியாளர்களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் குறைந் தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவ னங்களும் இத்திட்டத்தில் இணையலாம்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பேட்டை, ஐடிஐ எதிரே, திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல் லது 04622-342432, 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment