நெல்லை பள்ளி விபத்து: அறிக்கை தர முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவு - Daily Dhuniya

Breaking

Friday, December 17, 2021

நெல்லை பள்ளி விபத்து: அறிக்கை தர முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவு

திருநெல்வேலி பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்தது குறித்து அறிக்கை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொருள்காட்சித் திடல் அருகேவுள்ள டவுன் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் வெள்ளிக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளியில் சுவர் இடிந்து விழுந்தது குறித்தும் மாணவர்கள் பலியானது குறித்தும் திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment